Pages

May 8, 2009

கணியத்தின் தோற்றம்...

கணியம் என்றவுடன் பயந்துவிடாதீர்கள்.எனக்குத்தெரிந்த கணியஅளவீடு தொடர்பான கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் நீண்டநாள் முயற்சியின் பலனாக இன்று முதல் உங்கள் மத்தியில் வலம் வருகிறது. நீங்கள் இதனை வாசிப்பதோடு நின்றுவிடாது நீங்கள் அறிந்தவற்றையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
யாழ்ப்பாணத்து பௌதீக விஞ்ஞான மாணவர்களின் இலட்சியம் என்றால் பொறியியல் தவறினால் பௌதீக விஞ்ஞானம் மட்டுமே.இது அவர்களின் தவறல்ல.சூழலே காரணம்.ஏனெனில் எவரும் பெறுபேறு வந்ததும் கேட்பது என்ன என்பதல்ல மாறாக பொறியியலா? என்ற கேள்விதான் எழுகிறது.
இதையும் மீறி கணியஅளவீட்டிற்கு வந்திருந்தால் அது உடனடித்தீர்மானமே ஒழிய நீண்டகாலக்கனவு அல்ல.விதிவலக்காக இருக்கலாம்.ஆனால பெரும்பான்மை....???

இதற்கு என்ன காரணம்..?? போதிய அறிமுகமின்மை..?? போலி கௌரவம்..??

ஆனால் இன்று யாரைக்கேட்டாலும் கணியஅளவீடு....??எதற்காக...?? அதிகமானோர் நினைப்பது வருமானத்தை மட்டுமே...??கணியஅளவீட்டின் மீது கொண்ட ஆர்வத்தினாலோ அல்ல...??ஒரு சிலர் திட்டுவது கேட்கிறது. ஆனால் இங்கு கவனிக்கப்படவேண்டியது பெரும்பாலானோர்.எல்லோருமல்ல. கல்வி என்பது வருமானத்தினை மட்டும் மையமானது அல்ல. அது ஒரு பகுதியே.

1 comment:

nessa said...

நல்லதொரு முயற்சி வாழ்த்துக்கள் நண்பனே

Related Posts Plugin for WordPress, Blogger...