Pages

Nov 3, 2009

இவனல்லோ எழுத்தாளன்!!!



என்ன நடந்ததென்று பார்க்கறீங்களா?
இருக்கிறம்ஒன்றுகூடலில் இருக்கிறதைச்சொன்னேன்.இந்த அனுபவம் நன்றாகவே இருந்தது.
நானும் ஒரு பதிவர் என்ற நம்பிக்கை என்னை இதன் பின்னர் பெரிதும் உற்சாகப்படுத்துகிறது.
இங்கு என் கண்ணில்பட்ட என்னைக்கவர்ந்த ஒன்று, ஒருவர் ஒலிவாங்கியில் உரையாடி முடித்தபின் தனது கையடக்கத்தொலைபேசியை switch on செய்தார். இன்று எம்மத்தியில் பலர் பெரிய நிகழ்ச்சிகளில் கூட switch off செய்யாமல் ஒலிவாங்கியில் உரையாடுவதுண்டு. இதனால் உரையாடலின் மத்தியில் அழைப்பு வந்தால் silence இல் இருந்தாலும்கர்...............” எனும் சத்தம் வரும் இதனால் அங்கு எல்லோருடைய எண்ணமும் திசை திருப்பப்படுகிறது.அங்கு இவ்வாறு செய்தவர் ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியர்.இவரது செயற்பாடு ஒரு முன்னுதாரணமாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே!! இது எழுத்தாளனுக்கு அழகு!!

அதுமட்டுமா,பல்வேறுபட்ட பதிவர்களின் அறிமுகம் கிடைத்தது. இதற்குஇருக்கிறம்அச்சுவலை குழுவினருக்கு கணியத்தின் நன்றியையும் கூறிக்கொள்கின்றேன்.

புகைப்படங்களைத்தந்த சுபானுவிற்கு நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...